இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மழை பாதிப்பு குறித்த தமிழக அரசின் ஆய்வறிக்கை கிடைத்தவுடன், ஆய்வு நடத்த மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.