வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 8 சென்டி மீட்டர் மழையும்,அடுத்தபடியாக ஏற்காட்டில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
வேலூர் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து நேற்றிரவு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறியது. பின்னர் ,இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று காலை மேலடுக்கு சுழற்சியாக மாறியது.