தமிழக அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்!

தமி­ழக அர­சி­யல்­வா­தி­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணியப் போவ­து­மில்லை. அத்­து­மீ­றிய இந்­திய மீன­வர்­களின் பட­கு­களை விடு­விக்க தயாரும் இல்லை என்றும் ஸ்ரீலங்கா அர­சாங்கம் அறி­வித்­தது.

கொழும்பு மாளி­கா­வத்­தை­யி­லுள்ள கடற்­றொழில் நீரியல் வளத்­துறை அமைச்சில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை காலை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே ஸ்ரீ அமைச்சர் மஹிந்த அம­ர­வீர இதனை தெரி­வித்தார்.

தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

யாழ்ப்­பா­ணத்தில் தற்­கொலை அங்­கியும் ஆயு­தங்­களும் மீட்­கப்­பட்­டதை பெரி­து­ப­டுத்தி பொய்­யான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லென்றும், மீண்டும் புலிகள்  தலை தூக்­கு­வ­தா­கவும் பிர­சாரம் செய்­கின்­றனர். இதில் எந்­த­வி­த­மான உண்­மை­களும் இல்லை. தினம் தினம் இவ்­வா­றான ஆயு­தங்கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன. இதனால் தேசியப் பாது­காப்­பிற்கு எந்­த­வி­த­மான அச்­சு­றுத்­தல்­களும் இல்லை. மாறாக இவ்­வா­றான பொய்­யான பிர­சா­ரங்­களால் இலங்­கைக்கு விடு­மு­றையைக் கழிப்­ப­தற்கு வர­வுள்ள, இங்கு ஹோட்­டல்­களில் அறை­களை பதிவு செய்த பெரும் தொகை­யான உல்­லாசப் பிர­யா­ணிகள் தொலை­பேசி அழைப்­பு­களை ஏற்­ப­டுத்தி நாம் இலங்­கைக்கு வர­லாமா? மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கி­விட்­டதா? என்­றெல்லாம் வின­வு­கின்­றனர்.

பொய் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­ப­வர்கள் தமது அர­சியல் இருப்பை பாது­காக்க இதன் மூலம் முயற்­சிக்­கின்­றனர்.

ஆனால், இவர்­களின் செயற்­பா­டு­களால் நாட்­டுக்கும், பொரு­ளா­தா­ரத்­திற்­குமே பாதிப்பு ஏற்­ப­டு­கி­றது. இவர்கள் நாட்­டுக்கு துரோகம் செய்­கின்­றனர். அத்­தோடு நாட்டு மக்­களும் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சியில் இருக்கும் வரை நாட்டில் பயங்­க­ர­வாதம் தலை­தூக்க இட­ம­ளிக்­க­மாட்டார். அத்­தோடு மீண்­டு­மொரு பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கு­வ­தற்கு தமிழ் மக்­களும் விரும்­ப­வில்லை. அதனை தமிழ் மக்கள் ஆத­ரிக்­கவும் இல்லை. தமிழ் மக்­க­ளுக்கு மீண்­டு­மொரு ஆயுத கலா­சாரம் அவ­சி­ய­மில்லை.

நான் அடிக்­கடி யாழ்ப்­பாணம் செல்­கிறேன். இதனால் அங்­குள்ள மக்­களின் நிலை­மை­களை நான­றிவேன்.

அதே­வேளை தமிழ் நாட்டு அர­சி­யல்­வா­தி­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு நாம் ஒரு போதும் அடி­பணிய­மாட்டோம்.

மீன­வர்­களை விடு­தலை செய்வோம். இந்­திய மத்­திய அர­சு­ட­னேயே எமது தொடர்­புகள் பேணப்­ப­டு­கின்­றன. இதற்­க­மைய பரஸ்­பர இணக்­கப்­பாட்டின் கீழ் இந்­திய மீன­வர்கள் 99 பேர் விடு­தலை செய்­யப்­ப­ட­வுள்­ளனர். அதே­போன்று இந்­தி­யாவில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 9 இலங்கை மீன­வர்­களும் விடு­தலை செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

ஆனால் ஒரு போதும் இந்­திய மீன­வர்­க­ளிடம் கைப்­பற்­றப்­பட்ட பட­குகள், உப­க­ர­ணங்கள், வலைகள் மீளக் கைய­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. பருத்­தித்­து­றையில் பாரிய மீன்­பி­டித்­து­றை­முகம் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

காரைநகர், குருநகரிலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன.

அது மட்டுமல்லாது முல்லைத்தீவிலுள்ள மீனவர்களுக்கு இந்திய உதவியுடன் 150 படகுகள் வழங்கப்பட்டன.

இன்னும் இரண்டொரு மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கப்படவுள்ளது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையும் கிடைக் கவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்அரசியல்அரசுகட்சிதமிழகம்படகுகள்மக்கள்மஹிந்த அம­ர­வீரமீன் பிடியாழ்ப்பாணம்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment