தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல் – இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

தமிழக மீனவர்கள் கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும் மீனவர்களின் மீன் பிடித் தளபாடங்களை சேதப்படுத்தியுள்ளது இலங்கை கடற்படை. மீனவர்களின் படகுகளில் ஏற்படுத்திய சேதம் காரணமாக ஒரு படகு கடலில் மூழ்கியுள்ளது. அந்த படகில் இருந்த 5 மீனவர்களை மற்றைய மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கையில் புதிய அரசு ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படைகச்சதீவுதமிழகம்தாக்குதல்படகுகள்புதிய அரசுமீனவர்கள்
Comments (0)
Add Comment