தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
யாழ் பல்கலைக் கழகத்தில் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு சுடர்கள் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
நிகழ்வில் பல்கலைகழக மாணவர்கள்,விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் என பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.