அக்குரஸ்ஸ நகரின் 15 முஸ்லிம் கடைகள் உள்ளன. ஐந்து கடைகள் ஒரே பக்கத்தில் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மேற்படி ஐந்து கடைகள் உள்ள பக்கமாக பெற்றோல் குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது. க
டையின் கதவுகள் உட்பட முன்பக்கம் சேதமடைந்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.