அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் உங்களுக்கெல்லாம் இப்போது அறிவுரை எதுவும் கூறப்போவதில்லை. ஏனென்றால் உங்களுக்கெல்லாம் இனிமேல் அறிவுரை எதுவும் சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் பெற வேண்டிய அறிவுரைகளையெல்லாம் இங்கே வீற்றிருக்கின்ற செயற்குழு, சட்டப் பேரவைக்கு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள்.
இனி மேலாவது நாம் எப்படி செயற்பட வேண்டும் என்பதற்கு நம்மை நாமே திருத்திக் கொண்டு இடையிலே நுழைந்த துரோகச்செயல்களுக்கு இடம் தராமல், தூய்மையாக தி.மு.க.வை நடத்திச்சென்று, அடுத்தடுத்த வெற்றிகளைப் பெறுவதற்கு நாம் முனைய வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.
தி.மு.க.என்றைக்கும் தோற்காது. தோற்கப்போவதுமில்லை. தி.மு.க.வை அழிக்கலாம் என்று நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போய்விட்டார்கள். இதற்கு முன்பே இந்தக் கட்சிகள் தலை தூக்கி ஆடிய காட்சிகளையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். அந்தக் காட்சிகள் எல்லாம் மாயமாய் மறைந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம்.
எனவே, அந்த நம்பிக்கையோடு இப்படிப்பட்ட முடிவுகளைத்தந்த தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தலை நடத்திய அதிகாரிகள், அரசு இவர்களுக்கெல்லாம் பாடம் போதிக்கும் வகையில் அடுத்து நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் பலமான அடியாக ,யாருக்கும் பயப்படாத அடியாக, துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக, எடுத்து வைக்க வேண்டுமென இந்தச் செயற்குழுவில் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.