ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மொசுருதீன் திருப்பூரில் கடந்த 6 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வந்தது தெரிய வந்தது.
தீவிரவாதி மொசுருதீன் பிடிபட்ட சம்பவத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
இதனால் வெளியூரில் வந்து தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.
தற்போது கோவையில் வேலை பார்க்கும் வெளியூர் தொழிலாளர்களின் முகவரி சான்று, வாடகை வீட்டில் வசிப்பவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
கோவை மாநகரில் உள்ள 15 போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாடகை வீடுகளின் உரிமையாளர்களிடம் ஒரு விண்ணப்பத்தை போலீசார் கொடுத்து வருகிறார்கள்.
அதில் வாடகை வீட்டில் இருப்பவர்கள் பெயர் விவரம், நிரந்தர முகவரி, எத்தனை ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வீட்டின் உரிமையாளர்கள் பூர்த்தி செய்து அளித்து வருகிறார்கள்.
மேலும் தனியார் தங்கும் விடுதிகள், லாட்ஜூகளில் தங்கியிருப்பவர்கள் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதற்காக அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.