உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘கிருலப்பனையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நடத்திய மே தினக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலே தொனிப்பொருளாக இருந்தது. இவற்றுக்கு நாம் அஞ்சப்போவதில்லை. தேர்தலுக்கான பணிகள் என்று நிறைவு பெற்றதன் பின்னரே தேர்தல் நடைபெறும்’ என்று அவர் குறிப்பிட்டார்.
‘எல்லை நிர்ணய செயற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன. இதனை நிறைவு செய்வதற்கான காலம் பற்றாக்குறையாக உள்ளமையாலேயே, தேர்தலை நடத்துவதற்கு காலதாமதம்; ஏற்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழிக்கமைய, உள்ளூராட்சி மன்றத்தேர்தல், தொகுதி வாரி முறையிலேயே நடைபெறும். இதற்கான ஆதரவும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும்,இ ‘கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயத்தில், சிறுபான்மை சமூகத்துக்கு பெரும் பாதிப்பு காணப்பட்டது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும். இதில் மாற்றம் இல்லை’ என்று அவர் உறுதியளித்துள்ளார்.