சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்குச் செல்ல முற்பட்ட 18 பேர், ஸ்ரீலங்கா கடற்படையினரால் நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 18 பேரும், மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது..