இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு அளிக்கப்படும். எனவே, அவர்களுக்கான வயது வரம்பு 30 ஆகும். ஆனால், அனைத்து பிரிவினரும் அதிகபட்சம் 3 தடவை மட்டுமே தேர்வு எழுத முடியும்.
இந்த ஆண்டு எழுதும் தேர்வுதான், முதல் தடவையாக கணக்கில் கொள்ளப்படும். இதற்கு முன்பு எழுதப்பட்ட மருத்துவ நுழைவுத்தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பதால், அத்தேர்வுகளில் பங்கேற்றவர்களும் இனிமேல் 3 தடவை தேர்வு எழுதலாம்.