வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.
யாழ். கோவில் வீதியிலுள்ள அமைந்துள்ள நீதியரசர் விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று காலையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுமென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.