நூறு கோடி ரூபா பெறுமதியான 100 கிலோ ஹெரோயின் மீட்பு!

சுமார் 100 கோடி ரூபா பெறு­ம­தி­யான 100 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் தென் கடற்­ப­ரப்பில் இருந்த கப்பல் ஒன்­றி­லி­ருந்து கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. பல மாதங்­க­ளாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விசேட விசா­ர­ணை­யொன்றின் பிர­தி­ப­ல­னா­கவே இந்த போதைப்பொருள் கைப்­பற்­றப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார். இதன் போது கடலில் வைத்து 11 சந்­தேக நபர்­களும் தப்­பி­யோட முனைந்த மேலும் மூன்று சந்­தேக நபர்கள் நிலப்­ப­ரப்பில் வைத்தும் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்கள் வெளி நாட்­ட­வர்கள் எனவும் உதவி பொலிஸ்

அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார். இந்த விசேட நட­வ­டிக்­கைக்கு கடலில் இருந்த கப்­பலை நெருங்க கடற்­ப­டையின் உத­வியை பொலிஸார் பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இந்த சம்­பவம் குறித்து மேலும் அறிய முடி­வ­தா­வது,

கடந்த பல மதங்­க­ளுக்கு முன்னர் சர்­வ­தேச போதைப் பொருள் கடத்தல் வலை­ய­மைப்பு ஒன்று தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். பொலிஸ் போதிப் பொருள் தடுப்புப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­த­ரவின் மேற்­பார்­வையில், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கமல் சில்­வாவின் கீழ் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இந் நிலை­யி­லேயே தென் கடலில் உள்ள கப்பல் ஒன்ரில் ஹெரோயின் கடத்­தப்ப்­டு­வதை கண்­டு­பி­டித்த பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் தென் பகுதி கடல் பிர­தே­சத்தால் நகர்ந்­து­கொண்­டி­ருந்த குறித்த கப்­பலை நோக்கி கடந்த 4 நாட்­க­ளுக்கு முன்னர் சிறப்பு பொலிஸ் அணி­யுடன் கடற்­ப­டையின் ஒத்­து­ழைப்­புடன் சென்­றுள்­ளனர்.

இந் நிலையில் குறித்த கப்­பலை நடுக்­க­டலில் வைத்தே சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதி­கா­ரிகள் கப்­பலில் 100 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் இருப்­பதைக் கண்­ட­றிந்­தனர். அவற்றைக் கைப்­பற்­றிய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் கப்­பலில் இருந்த 10 ஈரா­னி­யர்கள், ஒரு பாகிஸ்தான் நாட்­டவர் ஆகி­யோரை கைது செய்­தனர்.

இத­னி­டையே இது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த மற்­றொரு குழு நேற்று நிலப் பிர­தே­சத்தில் இந்த கடத்­த­லுடன் தொடர்­பு­டைய மூவரைக் கைது செய்­தது. இவர்­களும் வெளி நாட­வர்­க­ளாவர். இவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்ப்ட்­டுள்­ளனர். இந் நிலையில் கைப்­பற்­ரப்­பட்ட 100 கிலோ ஹெரோயின் கப்­ப­லுடன் நேற்று இரவு வேளையில் கொழும்பு துறை முகத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. 100 கோடி ரூபா ஹெரோ­யினும் சந்­தேக நபர்­களும் தற் சமயம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்ப்ட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கப்பலானது கொழும்பு துறை முகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

கடற்படைகப்பல்கைதுகொழும்புதுறைமுகம்போதைப்பொருள்போலீஸ்மீட்புவிசாரணைஸ்ரீலங்காஹெரோயின்
Comments (0)
Add Comment