இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி, அவ்வாறான முறையில் எந்தவொரு நாட்டிலும் பணத்தை வைப்பிலிடமுடியாது. அவ்வாறு, சட்டவிரோதமான முறையில் வைப்பிலிட்டவர்களுக்கு எதிராக, சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார். கொழும்பில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.