பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்துவதை பாக்கிஸ்தான் நிறுத்த வேண்டும்- ராஜ்நாத் சிங்

பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்துவதை பாகிஸ்தானும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யும் நிறுத்திக் கொண்டால், தெற்காசியாவின் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். பயங்கரவாத அமைப்புகளில் நல்ல பயங்கரவாத அமைப்புகளும் இருக்கின்றன என்று கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், தனது சொந்த நலனுக்காக பயங்கரவாத அமைப்புகளை கருவியாகப் பயன்படுத்தும் போக்கினை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய முஸ்லிம்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள் என்று குறிப்பிட்ட ராஜ்நாத்சிங், பயங்கரவாத சித்தாந்தங்களை அவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்து சில இளைஞர்கள் இணையதளங்களில் கருத்து தெரிவிக்கும் விவகாரம் கவலைக்குரிய ஒன்று என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

அமைச்சர்அளவுஉள்துறைஐஎஸ்ஐகருவிசிங்பயங்கரவாதம்பயன்பாடுபாக்கிஸ்தான்மத்தியராஜஸ்தான்ராஜ்நாத்
Comments (0)
Add Comment