கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு பலகத்துறை, பெரியமுல்ல பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து 16 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஸ்ரீலங்காவின் நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கட்டான ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட 16 பள்ளிவாசல்களுக்கே இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
பள்ளிவாசல் நிர்வாகங்கள் கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.