மேலும் பலர் வெள்ளத்தினால் வீடு, வாசல்களை இழந்து பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலம் அவுரங்காபாத் அருகேயுள்ள புன்புன் நதியில் இன்று படகு கவிழ்ந்தது.
அதில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகள் உட்பட சுமார் 15 பேர் மாயமாகினர். அவர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேடுதல் மற்றும் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.