புதுக்குடியிருப்பில் கிண்று ஒன்றில் இருந்து எறிகணைகள் மீட்பு…

புதுக்குடியிருப்பு பிரதேசசபை கிணற்றுக்குள் இருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 அடி­கள் ஆழம் கொண்ட   கிணற்­றில் இருந்து மக்­க­ளுக்­குக் குடி­தண்­ணீர் வழங்­கப்­ப­ட்டு வந்த நிலையில் ­தற்பொழுது  வறட்­சி­யால் கிணற்­றின் நீர் வற்­றி­யுள்­ளது.

இந்நிலையில் நேற்றைய தினம்   கிணற்­றைத் துப்­பு­ர­வாக்­கும் நட­வ­டிக்­கை­கள் பிர­தேச சபைப் பணி­யா­ளர்­க­ளால்  மேற்­கொள்­ளப்­பட்­டன.

இதன்போது கிணற்­றில் இருந்த நீர் முற்­றாக இறைக்­கப்­பட்டு மண் அக­ழப்­பட்­டதபோது  5 எறி­க­ணை­கள் தென்­பட்­டுள்­ளன.

இதனை அடுத்து துப்­பு­ரப் பணி­கள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்­டுப் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பொலிஸாருக்கு  தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

சம்­பவ இடத்­துக்­குச் சென்ற பொலிஸார் எறி­க­ணை­களை மீட்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்னடுத்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எறிகணைகிண்றுபுதுக்குடியிருப்புமீட்பு
Comments (0)
Add Comment