இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஏ.நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
புதுச்சேரி முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை ஹோட்டல் அசோகாவில் சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், மேலிடப் பார்வையாளர்கள் ஷீலாதீட்சித், முகுல்வாஸ்னிக் ஆகியோர் பங்கேற்கின்றனர். அவர்கள் எம்எல்ஏ-க்களிடம் கருத்துகளைக் கேட்டு கட்சித் தலைமைக்கு தெரிவிப்பர். பின்னர், கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி, காங்கிரஸ் சட்டப் பேரவை கட்சித் தலைவர் யார் என அறிவிக்கப்படுவார். கட்சியில் உழைத்த அனைவருக்கும் முதல்வர் பதவி கேட்கும் உரிமை உள்ளது என்றார் நமச்சிவாயம்.