பேரறிவாளன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 3 நாள் சிகிச்சை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் 3 நாள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார்.

மேலும் மருத்துவமனையில் கைதிகளுக்கென உள்ள சிறப்பு வார்டில் பேரறிவாளனை அனுமதிக்கப்படவுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி இளங்கோ தெரிவித்துள்ளார். சிறுநீரக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் 3-ஆவது முறையாக இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

அனுமதிஅரசு மருத்துவமனைகொலை வழக்குசிகிச்சைசிறுநீரக நோய்பேரறிவாளன்ராஜீவ் காந்திராயப்பேட்டை
Comments (0)
Add Comment