மேலும் லண்டன் வர்த்தகக் கல்வி மையத்தின் மாநாட்டில் பங்கேற்றுப் பேசியபோது இத்தகவலை ராஜன் தெரிவித்துள்ளார். பொருளாதார சிக்கல்களுக்கு சிறப்பான தீர்வு காண்பதற்கு உதவக்கூடிய விதிகளை புதிதாக ஏற்படுத்த வேண்டியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் விவாதித்து, சர்வதேச அளவில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி இதனை செய்ய வேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார். தவறினால் 1930களில் ஏற்பட்டது போன்ற பொருளாதார சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்ற கவலை ஏற்படுவதாகவும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.