போற்குற்றவாளி கருணாநிதியை ராஜபக்சவுடன் சேர்த்து தண்டிக்க வேண்டும்!

இலங்­கையில் நடை­பெற்ற போர்க் குற்­றத்­திற்­காக சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் ராஜபக் ஷவுடன் இணைத்து தண்­டிக்­கப்­பட வேண்­டிய ஒரு போர்க்­குற்­ற­வாளி கரு­ணா­நிதி என்று அ.தி.மு.க நட்சத்­திர பேச்­சாளர் நாஞ்சில் சம்பத் தெரி­வித்­துள்ளார்.
கரூரில் நடை­பெற்ற பிர­சாரக் கூட்­டத் தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய அவர் மேலும் தெரி­விக்­கையில்,
இலங்­கையில் போர் தீவி­ர­மாக நடந்த நேரத்தில் இலங்கை அர­சுக்கு போர் வீரர்­க­ளையும், இரா­ணுவத் தள­பா­டங்­க­ளையும் அள்­ளிக்­கொ­டுத்­தது காங்­கிரஸ். அந்த நேரத்தில் தமி­ழ­க த்தை ஆண்ட கரு­ணா­நிதி போரைத் தடுக்க முயற்சி செய்­தாரா? தனது எம்.பி.க்களை வாபஸ் வாங்­கி­னாரா, இலங்கை படு­கொ­லையில் ராஜ­பக் ஷ முதல் குற்­ற­வாளி என்றால், அடுத்த குற்­ற­வாளி கரு­ணா­நி­திதான். இவ­ரையும் சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் நிறுத்த வேண்டும்.
முதல்­வரின் சாதனைத் திட்­டங்­களை பட்­டி­ய­லிட்டு மக்­க­ளி­டத்தில் கூறி­னாலே போதும், நமக்கு வெற்றி கிடைத்­து­விடும். நாட்டு மக்­களின் வரிப்­ப­ணத்தில் மஞ்சள் குளித்து, உல்­லாசம் அனு­ப­வித்த கூட்டம் இன்று ஆட்சி அதி­கா­ரத்தில் இல்லை என்­ப­தற்­காக முதல்வர் ஜெய­ல­லிதா மீது இல்­லாத குற்­றங்­களைச் சுமத்­து­கி­றார்கள். புறம்­பே­சு­கிறார் மு.க. ஸ்டாலின். ஜெய­ல­லிதா பொய் சொல்­கிறார் என ஒரு­மையில் ஸ்டாலின் பேசி வருகிறார். நாவை அடக்கிப் பேச வேண்டும். இல்லையேல் அடக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக வேண் டிவரும் என்றார்.

அதிமுககருணாநிதிதண்டனைதேர்தல்நாஞ்சில் சம்பத்நீதிமன்றம்பிரச்சாரம்போர்குற்றம்ராஜபக்ஷ
Comments (0)
Add Comment