பயங்கரவாத விசாரணைப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலியான கடவுச்சீட்டுகள் மற்றும் வீசாக்களை வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்வதற்காக தயாரான குழுவொன்றுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டிருந்த 200 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், வீசா வடிவமைப்புக்கு பயன்படுத்தப்பட்ட கணணியொன்றும் மற்றும் அச்சு இயந்திரம் ஒன்றும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீசா ஒன்றிற்காக ஒருவரிடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.