மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை தயார் – ஜனாதிபதி ஆணைக்குழு

இறுதிகட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.

அதற்கு திகதி ஒன்றை வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் ஆணைக்குழுவில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடவுள்ளதாக அவர் கூறினார்.

யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வழங்கிய முறைப்பாடு மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

அறிக்கைஆணைக்குழுஇறுதிகட்டம்உரிமைசம்பவம்ஜனாதிபதிதாயரிப்புமனிதமீறல்மெக்ஸ்வல்மைத்திரியுத்தம்விசாரணை
Comments (0)
Add Comment