மலையக மக்கள் திட்டமிட்டு இனவழிப்பு செய்யப்படுகிறார்கள்!

மலை­யக மக்­க­ளுக்கு மல­ச­ல­கூடம் அமைப்­ப­தற்கு காணி­யில்லை. ஆனால் மது­பா­ன­சா­லைகள் அமைப்­ப­தற்கு ஒவ்­வொரு தோட்­டங்­க­ளிலும் காணிகள் வழங்­கப்­பட்­டுள்­ளன என நேற்று முன்தினம் சபையில் குற்­றம்­சாட்­டிய ஐ.தே.கட்சி பதுளை மாவட்ட எம்.பி. வடிவேல் சுரேஷ் மனநோயாளர் வைத்­தி­ய­சா­லை­களில் பைத்­தி­யக்­கா­ரர்­களை தூங்க வைப்­ப­தற்கு வழங்­கப்­படும் மாத்­தி­ரை­களை ‘‘கள்ளில்” கலந்து மலை­யக மக்கள் திட்­ட­மிட்டு இன அழிப்பு செய்­யப்­ப­டு­வ­தா­கவும் அவர் தெரி­வித்துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஆட்­சி­யு­ரிமை (விசேட ஏற்­பா­டுகள்) சட்ட மூலம் இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தில் உரை­யாற்­றும்­போதே வடிவேல் சுரேஷ் எம்.பி. இவ்­வாறு தெரி­வித்துள்ளார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

வட கிழக்கு மக்கள் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்­தார்கள். எனவே அவர்­க­ளுக்கு காணிப் பிரச்­சி­னைகள் தலை­தூக்­கின. அதற்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் அரசின் முயற்­சியை வர­வேற்­கின்றோம்.

ஆனால் யுத்தம் இல்­லா­மலேயே மலை­யக மக்கள் இன்று காணி­யில்­லாமல் வாழ்­கின்­றனர். மல­சல கூட­மொன்றை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு காணி பெற்றுக் கொள்­வ­தற்கும் மலை­யக மக்கள் சிர­மப்­ப­டு­கின்­றனர்.

ஆனால் ஒவ்­வொரு தோட்­டங்­க­ளிலும் மது­பா­ன­சா­லைகள் அமைப்­ப­தற்கு காணிகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

பெருந்­தோட்ட மக்­களை இலக்கு வைத்து இன அழிப்பை ஏற்­ப­டுத்தும் நோக்கில் திட்­ட­மிட்டு மலை­ய­கத்தில் மது­பா­ன­சா­லைகள் தலை­யெ­டுத்­துள்­ளன.

பது­ளையில் ஒவ்­வொரு தோட்­டங்­க­ளிலும் வீதி­களின் சந்­தி­க­ளிலும் மது­பா­ன­சா­லைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இதனால் மலை­யக சமூகம் சீர­ழி­வுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

சிங்­கள, முஸ்­லிம்கள் வாழும் பிர­தே­சங்­க­ளிலோ அல்­லது நக­ரங்­க­ளிலோ கிரா­மங்­க­ளிலோ இல்­லாத வகையில் மலை­ய­கத்தில் மது­பா­ன­சா­லைகள் திறக்­கப்­ப­டு­கின்­றன.

பதுளை, நுவ­ரெ­லியா, கண்டி உட்­பட மலை­ய­கத்தில் மது­பா­ன­சா­லைகள் அதிகம் உள்­ளன.

இது மலை­யக மக்­களை இலக்கு வைத்த இனச் சுத்­தி­க­ரிப்பே என எண்ணத் தோன்றுகிறது.

அதேவேளை, மலையகத்தில் விற்பனை செய்யப்படும் கள்ளில் பைத்தியக்கார வைத்தியசாலைகளில் பைத்தியக்காரர்களை தூங்க வைப்பதற்காக வழங்கப்படும் மாத்திரைகள் கலக்கப்படுகின்றன என்றும் வடிவேல் சுரேஷ் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இனவழிப்புகள்ளுகாணிகள்பெருந்தோட்டம்பைத்தியம்மக்கள்மலையகம்மாத்திரைவடிவேல் சுரேஷ்
Comments (0)
Add Comment