யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவ்ர்கள் போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று முன்னெடுத்துள்ளனர்..
குறித்த ஊர்வலம் மானிப்பாய் பொதுச் சந்தைக்கு முன்பாக ஆரம்பமாகி மானிப்பாய் பிரதான வீதியூடாக சென்று மானிப்பாய் இந்துக் கல்லூரியை சென்றடைந்துள்ளது..
இதன்போது மாணவர்கள் போதைப் பொருளுக்கெதிரான கோசங்கள் எழுதப்பட்ட அட்டைகளைத் தாங்கியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
மானிப்பாய் பொலிஸாரின் ஒழுங்கு படுத்தலில் ,முன்னெடுக்கபட்ட இந்த ஊர்வலத்தில் ஆசியர்களும் ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கபபடுகின்றது.