முல்லைத்தீவு மூன்று முறிப்பு பகுதியில் படையினர் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தால் உபயோகிகப்பட்டு வந்த 56.8 ஏக்கர் காணியே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.
20 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் இந்துக்க விக்கிரமசிங்க, காணிகளுக்கான பத்திரங்களை நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளார்.