சனி, ஞாயிறு என வார விடுமுறையை தொடர்ந்து திங்கள் கிழமை வினாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையும் சேர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் சொந்த ஊரை விட்டு சென்னையில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த தொடர் விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு அவரவர் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தாருடன் 3 நாளை நிம்மதியாக கழித்து விட்டு வருவதற்காக வெள்ளிக் கிழமை இரவு வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கோயம்பேடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்வதற்கே 3 மணி நேரம் ஆனதாக பலர் தெரிவித்தனர். பெசன்ட் நகரிலிருந்து கோயம்பேடு செல்லவே 2 மணி நேரம் ஆகியுள்ளது.