சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த அவசர கலந்துரையாடல் இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் இடம்பெறுவது குறித்து, முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டு எதிரணியின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் இந்தச் சிறப்புக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.