யாழ் ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் பயணித்துக் கொன்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென்று தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளதாக தெரியவருகின்றது.
இன்று முற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆட்டோ பயணித்துக் கொன்டிருந்த போது திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் ஆட்டோவின் சாரதி கீழிறங்கி ஏனையவர்களின் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டபோதும் ஆட்டோ முற்றாக எரிவடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.