யாழ் அராலியில் தந்தை மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதல் ….

யாழ்ப்பாணம் அராலி வடக்கு செட்டியாமடத்தை  சேர்ந்த  த்ந்தை மற்றும் மகள்மீது   கொள்ளையர்களினால் கூர்மையான ஆயுதங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தந்தை மற்றும் மகள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்  வீட்டில் இருந்த தங்க நகைகளையும் கொள்ளையர்கள் கொள்ளைடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அராலிதந்தைதாக்குதல்மகள்வைத்தியசாலை
Comments (0)
Add Comment