வவுனியா தாண்டிக்குளத்தில் கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து தாண்டிக்குளம் பகுதியில் வைத்து பொலிஸார் அவரை கைதுசெய்துஇள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட நபர் யாழ் கைதடியைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 652 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.