யாழ் நாவற்குழியில் வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியேறியதாக தெரிவித்து 65 தமிழ்க் குடும்பங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
குறித்த வழக்கினை வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாகவும் கூரப்படுகின்றது
ஐந்து வருடங்களுக்கு மேலாக நாவற்குழியில் உள்ள படைமுகாமை அண்டியுள்ள வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான பகுதியில் 65 தமிழ்க குடும்பங்கள் குடியேறி வசிக்கின்றனர்.
குறித்த காணிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுத்தி அன்ஹ்கிருந்தவர்களிற்கு கடந்த மே 28ஆம் திகதி பதிவுத் தபால் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் குறித்த குடும்பங்கள் வெளியேறாததால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.