யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியில் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து விற்பனைக்குத் தயாரான நிலையில் வைத்திருந்த 250 கிராம் கஞ்சாப் போதைப் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.