யாழ்.போதனா வைத்திய சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிவுக்கான கட்டடம் இன்று திறந்துவைப்பு..

யாழ்.போதனா வைத்திய சாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிவுக்கான கட்டடம் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

இதில்   மூன்று சத்திரசிகிச்சை கூடங்களும் ஸ்கெனர் மற்றும் எஸ்ரே கூடங்களும் அமைகபப்ட்டுள்ளது.

அதோடு அங்கு சுமார் 100 நோயாளர்களை தங்கவைத்து சிகிச்சை வழங்க கூடிய வகையில் கட்டில்களும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண மற்றும் நிதியமச்சர் மங்கள சமரவீர பிரதி ,அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இப் புதிய கட்டத் தொகுதியினை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னபிரதமர் ரணில் விக்கிரமசிங்கயாழ்.போதனா வைத்திய சாலை
Comments (0)
Add Comment