“ரக்னா லங்கா”பாதுகாப்பு நிறுவனத்தை கலைத்துவிடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக ஊடகதுறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வௌியிடும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.