பாராளுமன்றத்தில் நேற்று நிதி மசோதாவில் இதற்கான திருத்தத்தை கொண்டு வந்தது. இதை மீறி, ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்கத்துக்கு, அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
நிதி மசோதாவில், ரொக்க பரிமாற்றத்துக்கான திருத்தம் மட்டுமின்றி, 40 சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தங்களும் தாக்கல் செய்யப்பட்டன. கம்பெனி சட்டம், வருங்கால வைப்புநிதி சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டன. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது பின்வாசல் வழியாக காரியம் சாதிக்கும் செயல் என்று அவர்கள் விமர்சித்தனர். ஆனால், அவர்களின் ஆட்சேபனையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார். இந்த திருத்தங்களை ந%B