புயல் கரையேறும் பகுதியில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அதன்பாதிப்பு கடலூர் மாவட்டத்திலும் ஏற்படும் என்று மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (டிச.12) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.