விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் இரா­ஜாங்க அமைச்­சர் பத­வியி­லி­ருந்து நீக்கம்..

விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனை இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி யி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக நீக்­கு­ வ­தற்குத் பிரதமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனாதிபதியிடம் பரிந்­து­ரைத்­துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னின் கருத்­துத் தொடர்­பி­லான விசா­ர­ணை­கள் நிறை­வ­டை­யும் வரை அவரை இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி­யில் இருந்து தற்­கா­லி­க­மாக நீக்­கு­வ­தற்கே  பிரதமர் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதே­வேளை இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னின் கருத்­தில் அர­ச­மைப்போ அல்­லது தற்­போ­தைய சட்­டமோ மீறப்­பட்­டி­ருக்­கு­மா­யின் அது குறித்து ஆராய்ந்து உரிய சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு சட்­டமா அதி­ப­ருக்கு சபா­நா­ய­கர் அறி­வித்­துள்­ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன்  யாழில் தெரிவித்திருந்தமைக்கு நாடாளுமன்றத்தில்  பலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

இந்­தப் பின்­ன­ணி­யி­லேயே  இராஜாங்க அமைச்சரை  தற்­கா­லி­க­மாக  பத­வில் இருந்து நீக்­க  பிரதமர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிபதவி நீக்கம்பிரதமர்விஜயகலா மகேஸ்வரன்
Comments (0)
Add Comment