முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த மாதம் முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கியதேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் தெரிவிக்கையில்,
விஜயகலா மகேஸ்வரனை விளக்கமளிக்குமாறு கட்சி கோரியுள்ளதாகவும், தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த மாதம் செயற்குழு கூடும் போது இதுபற்றி முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.