விஜயகாந்த் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்

தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், மேடைக்கு எதிரே இருந்த நிழற்குடையில் ஜெயலலிதா படத்தை மறைக்க சொன்னார்

அப்போது நிழற்குடையில் இருந்த ஜெயலலிதா படம் கீழே விழுந்தது. இதையடுத்து அதிமுகவினர் அங்கிருந்த தேமுதிக பேனர்களை கிழித்தனர். அதிமுக எம்எல்ஏ ரங்கசாமி தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் மீது புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேமுதிக வழக்கறிஞர் ஜெயகுமார் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தஞ்சாவூர்தேமுதிகமதுரை உயர்நீதிமன்றம்முன்ஜாமீன்விஜயகாந்த்
Comments (0)
Add Comment