வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சில வழிகள்

வெயிலின் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பெரியவர்களளுக்கு எதாவது ஒரு வழி இருக்கும். ஆனால், குழந்தைகள் அப்படியல்ல.

அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய வேண்டிய ஒரு தேவை பெரியவர்களுக்கு உள்ளது. அந்த வகையில, கோடை காலத்தில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த அறிந்திருக்க வேண்டும். வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும். எனவே குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதிலாக, பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து அதில் குழந்தையை படுக்க வைக்கலாம்.

வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும். எனவே, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம். எனினும் இதனை செய்ய முன்னர் குழந்தை மருத்துவரின் அனுமதியைப் பெருவது மிக முக்கியம். ஒரே இடத்தில் படுத்துக்கொண்டிருப்பதால், குழந்தையின் உடலின் பின்பகுதி அவசரமாக உஷ்ணமாகிவிடும்.

எனவே, குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இடம் மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.

குழந்தைகள்கோடைகாலம்தாக்கம்பராமரிப்புபாதுகாப்புபெரியவர்கள்வெயில்
Comments (0)
Add Comment