ஸ்ரீலங்காவின் தேசிய பூவாக அல்லிப்பூ!

ஸ்ரீலங்காவின் தேசிய மலராக அல்லிப்பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மலர் தொடர்பில் விசேட குழுவினரால் ஆராயப்பட்ட பின்னரே புதிய மலர் தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும்,இது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்  தேசிய உயிர் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் காணப்பட்ட தேசிய மலரான நீலோற்பவம் தொடர்பில் இணையத்தில் தவறான நிழற்படங்களும் விமர்சனங்களும் எழுந்தது.இந்நிலையில் இதுகுறித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக பணிப்பாளர்  பத்மா அபேகோன் தெரிவித்தார்.
அமைச்சரவைஅல்லிப்பூதேசியமலர்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment