500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் மூழ்கிப் போன சீன கப்பலை தேடும் பணிகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய குறித்த கப்பலை, இலங்கை மற்றும் சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தேடவுள்ளனர்.
500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியுள்ளதாகவும் அதன் எச்சங்கள் அல்லைப்பிட்டி அப்பகுதியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.