ஒன்பது மாதங்களேயான தன்னுடைய சிசுவை, 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு முயன்றதாக கூறப்படும், தாயொருவரை கண்டி பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் அலுவல்கள் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கண்டி-கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே இந்தத் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.