கருமுட்டை ஸ்டெம்ஸ் செல்கள் மூலம் பார்வை பெற முடியும்

பார்வையை இழந்தவர்களுக்கு கரு முட்டையிலுள்ள ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மீண்டும் பார்வையை ஏற்படுத்த முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனினும் வயதின் மூப்பு அடிப்படையில் கண்பார்வையை இழக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த முறை வெற்றியளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பார்வைக் குறைபாடு உடைய 18 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது. இவர்களுக்கு மனித கருமுட்டையிலுள்ள ஸ்டெம்ஸ் செல்களை மாற்றீடு செய்ததன் மூலம் படிப்படியாக பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வுஇழப்புகண்பார்வைகருசெல்கள்நோயாளிபார்வைமுட்டைவயதுவிஞ்ஞானிகள்ஸ்டெம்
Comments (0)
Add Comment