சசிகலாவுக்கு கைதி எண் 9,234 மற்றும் இளவரசிக்கு கைதி எண் 9,235 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட இவர்களுக்கு காலை 7 மணி, பகல் 11 மணி மற்றும் மாலை 5 மணி என மூன்று வேளையிலும் சிறை உணவு வழங்கப்படும்.இதில் காலை 7 மணிக்கு 2 சப்பாத்தி, சாம்பார் அதனுடன் சேர்த்து காபி வழங்கப்படுகிறது.
பகல் 11 மணிக்கு 400 கிராம் சாதம், 400 கிராம் கேழ்வரகு களி உருண்டையுடன் சேர்த்து சாம்பார் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு கலவை சாதம் மட்டும் வழங்கப்படுகிறது.
மேலும், இருவருக்கும் ஒரு போர்வை வழங்கப்படும். இதனை தவிர்த்து சிறப்பு வசதிகளுக்கு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.