சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகளுக்கு அனுமதி மறுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலாவுக்கு கைதி எண் 9,234 மற்றும் இளவரசிக்கு கைதி எண் 9,235 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட இவர்களுக்கு காலை 7 மணி, பகல் 11 மணி மற்றும் மாலை 5 மணி என மூன்று வேளையிலும் சிறை உணவு வழங்கப்படும்.இதில் காலை 7 மணிக்கு 2 சப்பாத்தி, சாம்பார் அதனுடன் சேர்த்து காபி வழங்கப்படுகிறது.

பகல் 11 மணிக்கு 400 கிராம் சாதம், 400 கிராம் கேழ்வரகு களி உருண்டையுடன் சேர்த்து சாம்பார் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு கலவை சாதம் மட்டும் வழங்கப்படுகிறது.

மேலும், இருவருக்கும் ஒரு போர்வை வழங்கப்படும். இதனை தவிர்த்து சிறப்பு வசதிகளுக்கு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலாசிறைசொத்துக்குவிப்புபெங்களுரு
Comments (0)
Add Comment