ஜனவரியில் தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி!

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்.

 ஜனவரி 2வது வாரம் சென்னை வரும் அவர், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார். வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் நஜீம் கேட்டறிவார் எனத் தெரிகிறது.

 தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன், தேர்தல் ஆணையர்களான ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவா ஆகியோரும் சென்னை வரவுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல்சென்னைதமிழகம்தலைமை தேர்தல் ஆணையர்நஜிம் ஜைதி
Comments (0)
Add Comment