நேற்றுக் காலை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து பறப்பட்ட சிறிலங்கன் விமானத்தில் வந்த ஒருவரே இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கிய போது பயணிகளை இருக்கைகளில் அமருமாறு அறிவித்த விமானப் பணியாளர்கள் மெட்ரோபாலிரன் பொலிசாரின் பரிசோதனையின் பின்பே பயணிகள் இறங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவித்தனர்.
இதனையடுத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.