இதை தொடர்ந்து குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்ட போது இதிலிருந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் மூவர் நேற்று கிளிநொச்சி நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
மேலும் ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
குறித்த 4 பெண்களின் இரத்த மாதிரிகள் சட்டமருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன என்று பொலிஸார் மன்றில் குறிப்பிட்டனர்.
இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கையை விரைவில் மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.